Friday, December 22, 2006

இரத்ததானம் பற்றிய சந்தேகம்

நாளை நடை பெறும் அறுவை சிகிட்சைக்காக இந்த ரத்த வகை இவ்வளவு தேவை என்று குறுச்செய்தி அல்லது மெயில்கள் நமக்கு அடிக்கடி வரும். என் நண்பர்கள் சிலரும் அப்படி வரும் ரத்த தான கோரிக்கைகளுக்காக் முன்பின் தெரியாதவர்களுக்குக் கூட ரத்தம் கொடுத்துள்ளனர்.

அப்படி ரத்ததானம் கோரிய ஒருவரிடம், சம்பத்தப்பட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியில் அந்த ரத்தம் இல்லையா, இது ஒன்றும் அரிய வகை ரத்தம் இல்லையே என்று கேட்டபோது, ரத்தம் வங்கியில் உள்ளது ஆனாலும் அங்கே வாங்கினால் அதற்கும் பணம் கேட்பார்கள் என்று கூறினார்.

என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இப்படி ரத்த தானம் கோரி உதவி கேட்பது, ரத்தம் கிடைப்பது கடினம் என்பதால் அல்ல, ரத்த வங்கியில் வாங்கினால் செலவாகும், தானாமாக வேறோருவரிடம் பெற்றால் செலவில்லை என்பதுதான் காரணமா?

அப்படியானால் ரத்தம் வேண்டுபவர் அதற்காக மருத்துவமனைக்கு பணம் செலுத்தக்கூடிய அளவிற்கு வசதிபடைத்தவராக இருந்தும், அவரது செலவைக்குறைப்பதற்காக மட்டுமே நாம் ரத்த தானம் செய்வது அவசியமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.

அரசு மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்து, அது அவசர தேவைக்காக இலவசமாகத்தான் கொடுக்கப்படுகிறது என்பதால் அதில் பிரச்சனை இல்லை. இது முன்பின் தெரியாத தனிப்பட்ட நபரின் தேவைக்கு ரத்தம் கொடுப்பது பற்றி மட்டுமே.

ரத்த தானம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கினால் தெளிவு பெற வசதியாக இருக்கும்.

Tuesday, December 19, 2006

பாலின சர்ச்சை

ஆண் தன்மை அதிகமாக இருப்பதாக கூறி தமிழக வீராங்கனை சாந்தியின் பதக்கத்தை திரும்ப்பெற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. ஒரே நாளில் புகழில் உச்சிக்குச் சென்றவர், அதே வாரத்தில் நிலமை தலை கீழ். இது சாந்திக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவு.

தமிழ்நாடு அரவாணிகள் சங்கத் தலைவர் ஆஷாபாரதி, சாந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த ஆதரவை சாந்தியே ஏற்பாரா என்பது கேள்விக்குறி.

இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை குறை கூற முடியாது. பாலின சோதனைகள் இல்லையென்றால், இயல்பிலேயே உடல் வலு குறைவாகவுள்ள பெண்கள், ஆணாய்ப் பிறந்து பெண்ணாய் மாறும் அரவானிகளிடம் போட்டியிட முடியாது.

பாலின பிரச்சனையுள்ளவர்கள் ஆண்கள் பிரிவில் விளையாட்டில் கலந்து கொள்ள எந்த தடையுமில்லை. இதுதான் எளிதான தீர்வாக இருக்கும்.

Monday, December 18, 2006

தமிழ் தொழில் நுட்பத்திற்கான மொழியா?

தமிழ் தொழில் நுட்பத்திற்கான மொழியா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. ரேம்(RAM) என்பதை நினைவகம் என்று தமிழில் படித்தால் எளிதில் புரியும் என்று மா சிவகுமார் வலைபதிவில் எழுதியிருக்கிறார். RAM-ஐ விட "நினைவகத்தில்" புரிதல் குறைவுதான் என்பது என் கருத்து.

ஆங்கிலத்தில் ரேம் என்பது (RAM - Random Access Memory). அதாவது ரேண்டம்(Random) என்றால் நேரடியாக எதையும் எடுக்கலாம். வரிசையாக போய் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். ரேம் என்பது அப்படித்தான். Sequencial Access என்பது Hard Disk, Floppy Disk போன்றவற்றில் இருக்கிறது. ஆனால் RAM மெமரியில் அப்படியல்ல, Hard Disk போல Reading Head-ஐ ஒவ்வொரு இடமாக நகர்த்தி தேட வேண்டாம். தரவை(Data) நேரடியாக எடுத்துக்கொள்ளலாம்.

எனவேதான் அந்த மெமெரியை ரேம்(RAM) என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இப்படி அப்ரிவியேஷனாக (Abbreviation) ஆக பெயரிடுவதில் இவ்வளவு அர்த்தம் பொதிந்த சொற்களை அமைக்க முடிகிறது. இதை நினைவகம் என்று தமிழ்படுத்தியது அறைகுறையானதுதான். வேறு வழியில்லை தமிழில் அப்ரிவியேஷன் டெக்னிக் ஒர்க் அவுட் ஆகுமா?

Train-ஐ ரயில் என்றும் தமிழ்ப் படுத்தலாம், தொடர் வண்டி என்றும் தமிழ்ப் படுத்தலாம். தொடர் வண்டியில் புரிதல் அதிகம் என்று சொல்கிறார்கள். ஆனால் உச்சரிப்பதது கடினமாயிற்றே.

உச்சரிக்க
ரயில் - 3 மாத்திரைகள்
தொடர் வண்டி - 4 மாத்திரைகள் கால அளவு எடுத்துக்கொள்ளும். எளிய சொற்களையே பெரும்பாலோனோர் விரும்புவார்கள்.

பொருள் வெளிப்பட வேண்டும் என்று எப்போதுமே இப்படியான சொற்களை அமைத்துக்கொண்டிருந்தால் தமிழ் எப்படி சொல் வளம் பெறும். ஒரே செயலையோ பொருளையோ குறிக்க ஆங்கிலத்தில் ஏகப்பட்ட சொற்கள் உண்டு. தமிழில் ஒரே சொல்லில் ஏகப்பட்ட பொருள் கொள்கிறோம்.

தமிழை காலங்காலமாக கவிதை எழுத மட்டுமே உபயோகித்து வந்துள்ளனர். இலக்கணம் யாப்பு அது இதுவென்று வாக்கியங்கள் அமைக்க ஏகப்பட்ட கட்டுப்பாடு. அதாவது இவ்வளவு இலக்கணங்களையும் விதிகளையும் கற்றி தேறினால்தான் செய்யுள் இயற்றலாம். இந்த விதிகளை மீறாமல் வார்த்தைகளில் விளையாடி செய்யுள் இயற்றி விளையாடத்தான் தமிழை பண்டைய காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். 'ர' வில் சொல் ஆரம்பிக்கக்கூடாது, 'ன' வில் ஆரம்பிக்ககூடாது என்று கட்டுப்பாடுகள்.

அண்டைய சமூகத்தாரின் பெயரைக்கூட தமிழில் எழுத முடியாவிட்டால் அது பெருமையா, தமிழில் குறையா?

தமிழை வளப்படுத்தாமல், தமிழில் தொழில் நுட்பச்சொற்களை அமைக்க முடியுமா?

'ர' 'ன' வில் சொற்கள் ஆரம்பிக்கக்க்டாது என்ற கட்டுப்பாடுகள் இனியும் தேவையா? ஜ, ஸ, ஹ போன்ற எழுத்துக்கள் தமிழுக்கு தேவை இல்லையா? அவற்றிற்கு இணையான எழுத்துக்களை சட்டப்பூர்வமாக சேர்க்க வேண்டாமா!!!

Note on 2010: சில வருடங்களுக்குப்பின், இப்போது இப்பதிவைப் படிக்கும்போது, மா சிவகுமார் மற்றும் ஓகையின் கருத்துக்களோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். மொழியைப்பற்றிய புரிதல் அதிகமாகியிருப்பதுதான் காரணம். :)

Wednesday, October 18, 2006

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...

பிடித்த மதுவகைகள் பற்றி தமிழ்நாடு டாக்-ல் அரட்டையடித்திருந்தோம், உங்களுக்கெல்லாம் மிகவும் உபயோகப்படுமென்பதால் அதை தொகுத்து வழங்குகிறேன். ;)

(சின்னப்பசங்களும், திருமணம் ஆனவர்களும் படித்து, ஏங்க வேண்டாம்.)

ஆனந்த்:
ஷூட்டர்ஸ் என்று ஒரு வகை மது பார்களில் கிடைக்கும் முயற்சி செய்திருக்கிறீர்களா? (டகீலா மாதிரிதான்)

நானும் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், காக்டைல், வோட்கா, பாரின் சரக்கு லோக்கல் சரக்குன்னு பலதை முயற்சி செதுட்டேன்.. ஆனால் ஈஸ்ட் ஆர் வெஸ்ட் பீர் இஸ் பெஸ்ட்

பீரில் ஸ்காட்லந்தில் கிடைக்கும் டென்னெட்ஸ் என்னுடைய பேவரைட்

நான் இருக்கும் ஸ்காட்ல்ந்தில்தான் ஸ்காட்ச் விஸ்கி தயாரிக்கப்படுகிரது, இங்கிருந்துதான் உலகம் முழுதும் போகுது, இங்கு "Famous Grouse" ஸ்காட்ச் விஸ்கி கிக்கும் கூட விலையும் கையை கடிக்காது

சிவப்பு ரம் பிரியர்கள் கண்ட ரம்மை முயற்சி செய்யாதீர்கள், மேற்கிந்திய தீவுகளில் (குறிப்பாக ஜமைக்கா) வில் தயாரிக்கப்படும் "Black Heart" முயற்சி செய்யுங்கள்

வைட் ரம்மென்றால் பகார்டி, பகார்டி என்றால் வைட் ரம்.. அதை அடிக்க வைட் ரம்மில் ஆள் இல்லை

அதே போல

வோட்கா என்றால் ஸ்மிரின்னாப், ஸ்மிரினாப் என்றால் வோட்கா

பிராந்தியில் மிகவும் அருமையானது மார்டெல்தான்

வைனை இங்கே தண்ணி போல குடிக்கிறார்கள் எனக்கென்னவோ வைன் பிடிக்கவில்லை

நான் ஷாம்பெயின் சில பார்ட்டிகளில் குடித்துள்ளேன்.. அதுவும் வைனைப்போலத்தான் சுவை ஆனால் அதில் பீரைப்போல நுரை வரும். கிக்கும் கொஞ்சம் அதிகம்..விலை மிக மிக அதிகம்..

அதனாலேதான் ஷாம்பெயினை நான் வாங்குவதில்லை, பார்டிகளில் ஓசியாக குடுத்தால் மட்டும் குடிப்பது

என்னடா இவ்வளவு சொன்றேன்னு எனை மொடாக்குடியன்னு நினைச்சுடாதீங்க. .. நான் மாதத்திற்கு எக்காரணம் கொண்டும் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு தடவை மேல் குடிப்பதில்ல என்ற கொள்கையே வைத்திருக்கேன்

ரியோ:
எனது தேர்வு, ட்ராட் பியர்தான். அல்லது கிங்பிஷர் சூப்பர் ஸ்ட்ராங்.

வைன் குடித்தால் தோல் பளபளப்பாக மாறும் என்று சொல்வார்கள். உண்மையா?
மற்றபடி நீங்கள் சொல்லும் ப்ராண்ட்கள் இங்கு டாஸ்மாக்கில் கிடைக்காது என்று நினைக்கிறேன்.

சென்னையில் சவேராவின் பேம்பூ பாரும், ரெஸிடன்ஸியின் பைக் அண்ட் பேரல்ஸ் ட்ரை செய்து பாருங்கள்.

கள்ளு ட்ரை செய்ததில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்

ஆனந்த்:
உண்மைதான், உண்மையிலேயே வைன் உடலுக்கும் தோலுக்கும் நல்லது, இதயத்திற்கும் நல்லது..

ஆனால் வெளிநாட்டு காரர்கள் குடிப்பத்ற்கும் நம் குடிமகன் குடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு

இங்கு முழு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்த பின்தான் வைன் குடிப்பார்கள், அதிகம் குடிக்க மாட்டார்கள், இரண்டு கப்புக்குமேல் போகாது. சாப்பிட்ட பின் குடிப்பதால் அது குடலை பாதிப்பதில்லை

ஆனால் நம் குடிமகன் சாப்பாட்டுக்கு முன்தான் குடிப்பான், கிக்கு தலைக்கேறும் வரை குடித்துக்கொண்டே இருப்பான். வெறும் வயிற்றில் குடிக்க கூடாது, அது குடலுக்கு கெட்டது

லக்கிலுக்:
டகீலா ஒரே ஒரு முறை ட்ரை செய்திருக்கிறேன்.... அது வேறொன்றும் ஒஸ்தி சரக்கில்லை.... நம்ம ஊருல நாட்டுச்சாராயம் மாதிரி மெக்ஸிகோவின் நாட்டுச் சாராயம்.... சும்மா சுர்ருன்னு இருக்கும்.....

வைன் எல்லாம் லேடீஸ் ட்ரிங்க்மா.... அதுபோல தான் ஜின்னும்......

Kundu:
பியர்:
பியரில் இருவகை, ஏல், லகர். இதில் ஏல் கருமையாகவும் கசபபாகவும் இருக்கும் (ஸ்ரவுட் இந்த வகைதான்), எனக்குப் பிடித்தது லகர் வகை பியர்கள்.
பியரில் முக்கியமாக பார்க்கவேண்டியது அல்கோல் விகிதம். அனேகமான 4%லிருந்து 9% வரை இருக்கும் (சிலவற்றில் 10%க்கும் கூடுதலாக இருக்கலாம் - அது வியாபாரத்திற்க்காக).
எனது தெரிவு 5.6% to 6% அலக்ககோல் உள்ள லகர் வகையை சேர்ந்த பியர்.

பிராண்டி:
இதில் எனது தேர்வு ரமி மார்ட்டிலில்தான், பிராண்டியுடன் ஸ்பிரைட் (sprite)ம் ஐசும் (ஐய்வர்யா இல்லை ice) கலந்து குடித்தால் அமிர்தம்.

ஸ்காட்ச்:
இதில் எனது தெரிவு சிவாஸ் ரீகல் (12 years old). இதற்க்கு ஏதும் கலக்காது ice மட்டும் போட்டுக் குடிக்கவேண்டும், வேண்டுமாயின் சிறிது soda water கலக்கலாம்.
அடுத்ததாக ஜோனி வாக்கர். இதில் 5வகையுண்டு, ரெட் லேபல் (சாதாரணமானது) பிளக் லேபல் (12 years old), கிரீன் லேபல் (15 years old), கோல்ட் லேபல் (18 years old) அத்துடன் பிளு வேபல் (வித்தியாசமான முறையில் வடிக்கப்பட்டது). லேபலுக்கேற்ப விலையும் அதிகம்.
இதில் எனது தெரிவு பிளக் லேபல் (உண்மையை சொன்னால் மற்றவை குடிக்க பொருளாதாரம் இடம் தராது). வாழ்க்கையில் ஒரே ஒருமுறை அபீஸ் பார்ட்டில்யில் புளூ லேபல் ருசி பார்த்தேன்.

ரம்:
இதிலும் இரு வகை, வைற் ரம், டாரக் ரம்.
வைற் ரம்: பேட்ரியாட் சொன்னமாதிரி இதில் எனது தேர்வு பக்காடி தான், இதனை ஆரஞ்சு ஜூஸுடன் கலந்து குடிக்கவேண்டும் அல்லது ஸ்ராபரி ஜீஸ்.
டார்க ரம்: Always rum and coke இது எனது தாரக மந்திரம், இதில் எனது தெரிவு Havana CLub (12 years old). இதிலும் பேட்ரியாட் சொன்ன மாதிரி கண்டதை முயற்சி செய்ய வேண்டாம் அவை குதிரைக்களுக்குதான் நல்லது மனிதர்களுக்கல்ல.

வொட்கா/ஜின்:
இவற்றுடன் லெமன் கோடியல் கலந்து குடியுங்கள். இவை மணம் குறைந்தவை. இவற்றை அடித்து விட்டு வீட்டிற்க்கும் செல்லாம் பிடிபட மாட்டீர்கள் (உளறினால் அல்லது ஹெல் மட்டை வாசல் படியிலும் செருப்பை பீரோவிலும் வைத்தால் நான் பொறுப்பல்ல)

வைன்/ஸாம்பெயின்:
வைன் எனக்கு பிடிக்காது, இதில் எனக்கு அதிக அனுபவமும் இல்லை.
ஸாம்பெயின்: எதாவது பார்ட்டிகளில் முதலில் உடைத்து சிறிது குடித்து விட்டு, மற்ற குடிகளுக்கு தாவி விடுவேன்.

சாராயம்:
இதில் இலங்கையை சேர்ந்த (VSOA - Very Spcial Old Arrack) ஐ ஒருவரும் அடிக்கமுடியாது. இலங்கையில் இருக்கும் போது சிறுவயது இதைக் குடிக்க முடியவில்லை.
இங்கு வந்த பின் இது பற்றி கேள்விப்பட்டு, இலங்கை சென்ற நண்பர் மூலம் எடுத்து அருந்தினேன், தன்யன் ஆனேன். இதன் இளநீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

மில்லி/கசிப்பு:
ஒருமுறை 100 மில்லி வாங்கி 1000 மில்லி தண்ணீருடன் சேர்த்து குடித்தேன். அதன் காரம் இன்னும் தீரவில்லை.


OK, ஒரு சின்ன tip:
மது வகை குடித்தால் மறு நாள் தலையிடி, வாந்தி போன்ற உபாதை இருக்கும் (கர்ப்பம், இரவு குடியிலிருக்கும் போது யோரோ என்னவோ செய்து விட்டான் என பயப்பிடாதீர்கள்) இது சாதாரண hang-over தான், இதை தவிர்க்க இரவில் நன்றாக தண்ணீர் அருந்துங்கள், hang-overக்கு காரணம் dehydrationதான். அல்லது காலையில் எழுந்தவுடனே ஒரு பெக் சாப்பிடுங்கள் (ஒரு பெக் மட்டுதான்) இதை தெளிவடி என்று கூறுவார்கள்.



இதுவெல்லாம் எனது சொந்த அனுபவம், கல்யாணத்திற்க்கு முன்....

இப்போது தண்ணிதான்(H2O) இடையிடையே கொஞ்சம் தண்ணி (அல்ககோல்).

மேலதிக விபரங்களுக்கு PM செய்யவும்.....

இதை எழுதும் போது கொஞ்ச மில்லி அடித்துவிட்டுத்தான் எழுதுகின்றேன். ஞாபகமிருக்கட்டும்
குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு.

thayirsadam:
ஒரு காலத்தில், குடிப்பவர்களையும், குடிப்பழக்கம் உள்ளவரையும், நம் தமிழ் சமூகம் தாழ்வாகப் பார்த்தது..

மதுவிலக்கு என்பது ஒரு தீவிர சமூக இயக்கமாக இருந்தது... அதுவும் ஈ வே ரா, தி.க மற்றும் காங்கிரசு இயக்கங்களின் பாதிப்பால் படித்தவர், மது அருந்துவதை பெரிய அளவில் தவிர்த்தனர்...

ஆனால் இப்போது நம் தமிழக சமூகம் எவ்வளவு மாறியுள்ளது.... இன்று படித்தவர்களே அதிகமாக குடிமகன்களாக, மோடாக்குடியர்களாக இருக்கின்ற்னர்

குடிக்காதவர்களை, அதுவும் இள வயது ஆண்கள் குடிக்காதவர்களாக இருந்தால் ஏளனமாக பார்த்து படித்தவரே கேலி செய்கின்றனர்..

ஒரு காலத்தில் மதுவிலக்கில் தீவிர ஆற்வம் காட்டியது பெண்கள்.. இப்பொது சம உரிமை கோரி பெண்களே அதுவும் படித்த பெண்களே குடிக்கின்றனர்...

சமுதாய, இடது சாரி, மற்றும் சமூக நீதி சிந்தனையுள்ள அறிவுஜீவிகளும் மகிழ்ச்சியுடன் குடிக்கின்றனர்..

20 - 30 ஆண்டுகளில் எந்த அளவு சமூதாயம் மாறியுள்ளது என்பதை எண்ணி வியப்பாக இருக்கிறது.

Friday, October 13, 2006

உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் பயங்கர வன்முறை

சென்னையில் 155 மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் 140 வார்டுகளில் தி.மு.க வினர் 20 டாடா சுமோக்களில் வந்து கள்ள ஓட்டு போட்டனர். இதை எதிர்த்து அ.தி.மு.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வாறு சாலைமறியலில் ஈடுபட்ட அ.தி.முகவினரை தி.மு.க வைச்சேர்ந்த ரவுடிகள் அடித்து விரட்டி விட்டனர். இதனால் சென்னை முழுவதும் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைச்சம்பவங்கள் அனைத்தையும் போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இது தினமலர் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கிற செய்தி.

Wednesday, October 04, 2006

பயங்கரவாதி முகமது அப்சலுக்கு மன்னிப்பா?

2001 பாரளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுடன் தொடர்புடைய முகமது அப்சலுக்கும் இம்மாதம் 20ம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியான் இவன் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். அதை அப்துல் கலாம் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து வரும் 20ம் தேதி தணடனை நிறைவேற்றப்படாதென்று தெரிகிறது.

அவனுக்கும் மன்னிப்பு கொடுக்கப்படக்கூடாதென்று, அப்போது இறந்துபோன பாராளுமன்ற பாதுகாவலர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.

தில்லி ஐகோர்ட், மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி குற்றத்தை உறுதி செய்து தண்டனை அளித்தபின், இவனது கருணை மனு ஏற்கப்பட்டதன் காரணம் என்ன?

Monday, June 19, 2006

வாழ்க்கையில் ஒருமுறையாவது...

சில ஆங்கில இணையதளங்களில், வாழ்க்கையில் ஒருமுறையாவது செய்துவிட வேண்டுமென பலர் நினைப்பதை தொகுத்து வெளியிட்டிருப்பது, ஆர்வமூட்டக்கூடியதாக இருந்தது. அதில் எனக்கு பிடித்தவற்றை தமிழில் தொகுத்திருக்கிறேன்.


விளையாட்டு விழாக்களுக்குச் செல்லுங்கள்

உங்களுக்கு விளையாட்டுக்களில் பெரிதான ஆர்வம் ஏதுமில்லாதிருக்கலாம். ஆனாலும், பார்வையாளர்களின் கூச்சல், அங்கு உள்ள பரவசம், விளையாட்டு வீரர்களின் வெற்றி கொள்ள விழையும் வெறி, இவை அனைத்தும் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டுவரும். ஒரு உலகக்கோப்பை அல்லது ஒலிம்பிக்ஸின் பார்வையாளர்களாக இருந்திருந்தீர்களேயென்றால், அந்த நிகழ்ச்சிகளை உங்கள் வாழ்க்கையில் எப்போழுதுமே மறக்க மாட்டீர்கள். அல்லது குறைந்த பட்சம் உள்ளூர் கிரிக்கெட் மேட்ச் அல்லது வாலிபால் மேட்சாவது நேரில் பாருங்கள்.


சுற்றத்தோடு சில சமயங்கள்

உங்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவை நோக்குங்கள். உங்கள் சுற்றத்தாரில் எத்தனை பேர் உங்களுக்கு அறிமுகம்? வெளியில் பார்த்துக்கொண்டால், ஒரு சிறு புன்னகை. இவ்வளவுதான் பலரோடு உங்கள் அறிமுகம். அவர்களுடம் 20 வருடங்களாக வசித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் ஒரு விடுமுறை நாளில் அவர்களை உங்கள் வீட்டில் காபி அருந்த அழைக்கக்கூடாது. பக்கத்து வீடுகளுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்வது ஒரு ஆரோக்கியமான விசயம்.


ஏதாவது ஒரு தாவரத்தை வளருங்கள்

அது தக்காளியோ அல்லது தேக்கு மரமோ, ஒரு தாவரத்தை வளர்த்து அது வளருவதை கவனியுங்கள். நீங்கள் வளர்க்கும் தாவரத்தைப் பொருத்து உங்களுக்கு கனி கூட கிடைக்கலாம்.



பாலய சிநேகிதர்களை கண்டுபிடியுங்கள்.

நாம் பள்ளியில் படித்து முடிக்கும் காலகட்டங்களில், எப்போது பள்ளிவாழ்க்கை முடிந்து கல்லூரிக்குச் செல்வோமென எதிர்பார்த்துக்கொண்டேயிருந்திருப்போம். பள்ளி வாழ்க்கை முடியும்போது, குறைந்தபட்சம் பள்ளி நண்பர்களின் நட்பு தொடர வேண்டுமென விரும்பியிருப்போம். ஆனால் புதிய நண்பர்கள் வருகை, இடமாறுதல், நேரமின்மை போன்ற பல காரணங்களால் அவர்களைப் பிரிந்திருப்போம். அவர்கள் என்னவானார்கள், எங்கே உள்ளனர் என்பதை கண்டுபிடித்து பால்ய கால நினைவுகளை பகிரலாம்.


புல்வெளியில் படுத்துக்கொள்ளுங்கள்

செய்வதற்கு எளிமையான ஒன்று. இது வாழ்க்கையின் சிறு விசயங்களில் உள்ள அழகைக்காண்பதற்கும், அதன் மேன்மையை உணர்வதற்கும்தான். அன்றாடம் நாம் கடக்கும் பகுதிகளில் உள்ள எளிமையான இயற்கையழகுகளைக்கூட நாம் கவனித்திருக்க மாட்டோம். இன்று அவைகளை நெருக்கமாக சென்று வானத்தின் பின்னனியோடு ரசியுங்கள். அவசரப்படாமல் நிதானமாக ரசியுங்கள்.



கலைஞன் ஆகலாம்

உங்களில் ஒளிந்திருக்கும் கலைத்திறமையைக் கண்டுபிடியுங்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குவதுதான் கடினம். பொதுவாக, நமக்கு இதுவெல்லாம் வராது என சிலர் ஒதுங்கிவிடுவார்கள். நீங்கள் ஒரு கதை எழுத உட்காராமலோ, தூரிகையைத்தொடாமலோ இருக்கும்வரை, அதுதான் உங்களின் தனித்திறமை என்பது கூட தெரியாமல் போய்விடும். கவிதையோ, ஓவியமோ, சிற்பமோ எதுவென உணருங்கள். ஏற்கனவே கண்டுபிடித்திருந்தீர்களென்றால் அதற்கென ஒதுக்க நேரத்தைக் கண்டுபிடியுங்கள்.



மழை

அடுத்தமுறை மழை பெய்யும்போது, அனிச்சையாக ஒடி ஒளியாமல், மழையின்போது உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை ரசியுங்கள். காற்றில் புத்துணர்ச்சியை நுகருங்கள். இதுவரை நடந்திராத தெருக்களிலும், பூங்காக்களிலும் நனைந்த மலர்களை ரசியுங்கள்.(ஊட்டியோ, கொடைக்கானலையோ கற்பனை செய்து கொண்டு படியுங்கள், கோயம்பேடை நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல!!!)



நட்சத்திரங்களுக்கு கீழே தூங்குங்கள்

நகரவாசிகள் பெரும்பாலானோருக்கு இது வாய்த்திருக்காது. இரவில் நட்சத்திரங்களை நோக்கிக்கொண்டு வெட்ட வெளியில் படுத்துக்கொள்ளுங்கள். அதன் தூரத்தை கற்பனை செய்து பாருங்கள், நேரத்தையும் விண்வெளியையும் உணர்ந்து பாருங்கள். வாய்ப்பிருக்குமானல், வெட்டவெளியில் அமைந்த கூடாரத்தில், தலையை மட்டும் வெளியே வைத்து படுத்துக்கொள்ளுங்கள்.



சமைத்துப் பாருங்கள்

நீங்கள் மிகச்சிறப்பாக சமைப்பவராக இல்லாதிருக்கலாம். ஆனால் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. சில அடிப்படைகளைத்தெரிந்திருந்தால் போதுமானது. உணவு உங்கள் கண் முன்னே உருவாவதை பார்ப்பது சுவாரசியமானது. பசியைத்தூண்டும் வாசனையை நுகரும்போது, உங்கள் கைவண்ணத்தினை நீங்களே மெச்சிக்கொள்ளலாம்.


நண்பர்களோடு உங்களை மறந்திருங்கள்

கொஞ்சம் நண்பர்கள், நிறைய மது. இரவு முழுவதும் நீடிக்கும் அரட்டைகள். உங்கள் வாழ்க்கையின் சுமைகளில் இருந்து கொஞ்ச நேரம் விலகியிருக்கலாம். உங்கள் எல்லைகளை நீங்கள் உணர்ந்திருக்கும் வரை, நட்பை கொண்டாடுவதில் களித்திருக்கலாம்.

Friday, June 16, 2006

தமிழை வளர்க்கிறோமா?

தமிழை வளர்க்கிறோம் என்று ஆளாளுக்கு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏன் ஒருவரும் தமிழை செறிவூட்ட முனைவதில்லை? அதாவது புதிய தேவையான எழுத்துக்களைச் சேர்ப்பது. இலக்கண விதிகளை சரி செய்வது போன்றவைகள்.

நம் முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது என்பதால் எல்லாம் சரியாக இருக்கும் என்று கண்மூடிக்கொண்டு நம்ப வேண்டுமா? ஒரு இலட்சிய மொழியின் எழுதுவடிவம் என்பது, எல்லாவிதமான ஒலிகளையும் பதிப்பதற்குறிய வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். மற்ற மொழிகளை ஒப்பிடும்போது, தழிழில் அவ்வாறு வசதி குறைவுதான்.

உதாரணமாக பெரும்ப்பாலும் அனைத்து மொழிகளிலும் உபயோகிக்கும், ஜ், ஹ், ஷ் போன்ற எழுத்துக்கள் இன்னும் தமிழில் சேர்க்கப்படவில்லை. இன்னும் அவற்றை வடமொழி எழுத்துக்கள் என்று சொல்லியே உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றையும் தமிழில் சேர்த்துக்கொள்ளலாமே. ஏற்கனவே வடமொழி எழுத்துக்களை, அதன் உருவத்தை மாற்றித்தான் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலும் ஆங்கிலமொழியின் சில உச்சரிப்புகளைக்கூட தமிழில் சரியாக எழுதமுடியாது. உதாரணமாக CAT (பூனை) என்ற உச்சரிப்பை தமிழில் எழுத முடியாது. 'கேட்' என்றுதான் எழுத வேண்டும். 'ABRAHAM' என்ற பெயரை தமிழில் ஆபிரகாம் என்றுதான் எழுதமுடியும். அதாவது ஒரு வெளிநாட்டவரின் பெயரை அவர் மொழியில் உள்ள உச்சரிப்பில் எழுதிவைக்க முடியாது. அதற்காக ஏதாவது புது எழுத்துக்களை அறிமுகப்படுத்த முனையலாம். உதாரணமாக CAT - க-அட் ABRAHAM- அ-அப்ரஹ-அம்(இது ஒரு உதாரணம்தான், நாம் முயன்றால் மிகச்சிறந்த முறையில் இதற்கு தீர்வு காணலாம்.)


இப்பதிவின் எனது நோக்கம் என்னவென்றால், நாம் உபயோகிக்கும் வீடு, உடைகள், பொருட்கள் என அனைத்தையும் மேம்படுத்திக்கொண்டே செல்கிறோம், ஆனால் நாம் உபயோகிக்கும் மொழியை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறோம். இதற்கு காரணம் என்னவாக இருக்குமென்றால், நம் வசதிக்காக உருவாக்கப்பட்ட மொழியை, தெய்வத்திற்கு இணையாக வைத்ததுதான்.

நமக்காகதான் மொழியேயன்றி, மொழிக்காக நாம் அல்ல! மொழி சுயம்புவாக தோன்றியதல்ல. நாம்தான் உருவாக்கினோம், நாம்தான் அதை செறிவூட்ட வேண்டும். அல்லாவிடில் காலவோட்டத்திற்கு ஈடுகொடுக்கா முடியாமல் அழிந்துவிடும். பெரியார் பல எழுத்து சீர்திருத்தங்களைச் செய்தார். அதே போல இப்பொதும் எப்படி தமிழை மேம்படுத்தலாம், ஆங்கிலத்தை விட எப்படி எளிமைப்படுத்லாம் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதை விடுத்து 'தமிழைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று முழங்குவது வெறும் உணர்ச்சிகளைத்தூண்டவே பயன்படும்.

Note: At 2010 Nov 20, while reading this after some years, I can see all of my thoughts regarding tamil are changed now :).

Monday, February 06, 2006

அறிமுகம்

நானும் களத்தில் குதித்துவிட்டேன்!!!


இலக்கின்றி எனக்கு தோன்றுவதை எழுதப்போகிறேன். அனைத்தும் எனது கருத்துதான், தவறாகவும் இருக்கலாம்.

இந்த வலைப்பூவிற்கு எதையும் ஒருமுறை என்று பெயரிட்டிருக்கிறேன். எனக்கு எந்த நிரந்தர இலக்கும் கிடையாது. ஆனால் ஒரே ஒரு வாழ்க்கைதான் கிடைத்திருக்கிறது, அதை முழுவதுமாக வாழவேண்டும் என்பதே என் கொள்கை(?).

சரி, தவறு என்று எதுவுமே இவ்வுலகில் கிடையாது. ஒருமுறை சரியாக தோன்றுவது அடுத்த முறை தவறாக தோன்றலாம். அடுத்துவர்களை பாதிக்காமல் மகிழ்ச்சியாக வாழ்வது ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதே என் கருத்து. அதனால் எதையும் ஒருமுறை, ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்து விட்டேன். அதில் இந்த வலைப்பூவும் ஒன்று.

எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்,

கடவுள் படைப்பின் சாராம்சமுமாகும்.